உயர்ந்த மனிதர் நசீர் சூம்ரோ மரணம்
March 19, 2025

உலகின் உயரமான மனிதர்களில் ஒருவரான பாகிஸ்தானை சேர்ந்த நசீர் சூம்ரோ (55) உடல்நலக்குறைவால் காலமானார். நசீர் சூம்ரோ சிந்து மாகாணத்தை சேர்ந்தவர். அவரின் உயரம் 7 அடி 9 அங்குலம் ஆகும், இது சராசரி மனிதர்களை விட சுமார் 3 அடி அதிகமானது.
நசீர் சூம்ரோ பல ஆண்டுகளாக நுரையீரல் நோயால் அவதிப்பட்டு வந்தார். உடல் இணைப்பு பகுதிகளில் தொடர்ந்து வலி இருந்ததால் அவர் தினசரி வாழ்வில் பல சிரமங்களை எதிர்கொண்டார். சிகிச்சை பெற்றுவரும் நிலையில், உடல்நிலை மோசமடைந்து அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
நசீர் சூம்ரோ பாகிஸ்தானின் அடையாளமாக உலகம் முழுவதும் புகழ்பெற்றவர். அவரது அபூர்வமான உயரம் காரணமாக அவர் பெரும் கவனத்தை பெற்றிருந்தார். அவரது மறைவு பாகிஸ்தான் மக்களுக்கு பெரும் இழப்பாக பார்க்கப்படுகிறது.