உடன்குடி அனல்மின் நிலையத்தில் மின் உற்பத்தி தொடக்கம் தமிழகத்தின் மின் தேவையை பூர்த்தி செய்ய புதிய மைல்கல்

உடன்குடி அனல்மின் நிலையத்தில் மின் உற்பத்தி தொடக்கம் தமிழகத்தின் மின் தேவையை பூர்த்தி செய்ய புதிய மைல்கல்

தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியில் ரூ.13,077 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள சூப்பர் கிரிட்டிக்கல் அனல்மின் நிலையத்தின் முதல் அலகை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். இதன் மூலம் முதற்கட்டமாக 660 மெகாவாட் மின் உற்பத்தி பணிகள் அதிகாரப்பூர்வமாக நடைமுறைக்கு வந்துள்ளன.

கடலுக்குள் 9 கி.மீ தொலைவில் அமைக்கப்பட்டுள்ள நிலக்கரி இறங்கு தளம் மற்றும் நவீன கன்வேயர் பெல்ட் வசதிகள் இந்த திட்டத்தின் சிறப்பம்சங்களாகும். கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில், மாநிலத்தின் மின்சார தேவையை தன்னிறைவு செய்ய இந்த புதிய உற்பத்தி பிரிவு பெரும் உதவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *