உக்ரைன் போரில் 3.07 லட்சம் ரஷ்ய வீரர்கள் பலி?

நேட்டோவில் இணைய உக்ரைன் எடுத்த முயற்சியை எதிர்த்து, ரஷ்யா 2022ம் ஆண்டு பெப்ரவரியில் உக்ரைன் மீது போர் தொடுத்தது. மூன்றாண்டுகளாக நீடித்துவரும் இந்தப் போரில் இருதரப்புக்கும் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளதுடன், பலர் உயிரிழந்திருக்கக்கூடும் என உலக நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. ஆனால் இதுவரை இருநாடுகளும் தங்களது சாவுபட்டியல் குறித்து அதிகாரப்பூர்வ தகவலை வெளியிடவில்லை.
இந்த சூழலில், ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம், 3,07,900 ராணுவ வீரர்களுக்கு இறப்பு சான்றிதழ் தயாரிக்க உத்தரவிட்டுள்ளது. இது, போரில் இதுவரை சுமார் 3.07 லட்சம் ரஷ்ய வீரர்கள் உயிரிழந்திருக்கலாம் என்ற சங்கடமான தகவலை வெளிக்கொணர்கிறது. இருப்பினும், இந்த எண்ணிக்கை குறித்து ரஷ்யா இன்னும் எந்தவொரு அதிகாரப்பூர்வ விளக்கத்தையும் அளிக்கவில்லை. இது, போரால் பாதிக்கப்படும் குடும்பங்களின் மனவேதனையை மேலும் தீவிரமாக்கும் சூழ்நிலையை உருவாக்கியுள்ளது.