ஈரான் போரில் அமெரிக்கா வெற்றி பெற்றுவிட்டதாக டொனால்ட் டிரம்ப் அதிரடி அறிவிப்பு

மத்திய கிழக்கில் நிலவும் பதற்றமான சூழலில், ஈரானின் கடற்படை மற்றும் விமானப்படை முற்றிலும் சீர்குலைந்துவிட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஈரானின் தகவல் தொடர்பு சாதனங்கள் மற்றும் ஏவுகணை பாதுகாப்பு அமைப்புகள் முடங்கிவிட்டதாகவும், இந்தப் போரில் அமெரிக்கா வெற்றி பெற்றுவிட்டதாகவும் அவர் திட்டவட்டமாகக் கூறியுள்ளார். தற்போது ஈரான் மிகவும் பலவீனமான நிலையில் இருப்பதால், அமெரிக்கா பேச்சுவார்த்தையில் வலுவான இடத்தில் உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
ஈரான் தனது அணுசக்தி திட்டத்தை கைவிட ஒப்புக்கொண்டுள்ளதாகத் தெரிவித்த ட்ரம்ப், அந்நாட்டின் பழைய தலைமை முடிவுக்கு வந்துவிட்டதாகவும் கூறினார். ஒருவேளை அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால், ஈரானின் மின் நிலையங்கள் மற்றும் முக்கிய உள்கட்டமைப்புகளை அழிக்க அமெரிக்கா தயாராக உள்ளது. தற்போது ஐந்து நாட்களுக்கு அவகாசம் அளித்துள்ள நிலையில், ஈரானுடன் ஒரு புதிய ஒப்பந்தம் ஏற்படுமா என்பதை உலகம் உற்று நோக்குகிறது.