ஈரான் உச்ச தலைவரின் மனைவி உயிருடன் இருக்கிறார் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தது அரசு ஊடகம்

ஈரான் உச்ச தலைவரின் மனைவி உயிருடன் இருக்கிறார் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தது அரசு ஊடகம்

ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி மற்றும் அவரது குடும்பத்தினர் கொல்லப்பட்டதாக செய்திகள் வெளியாகின. இதில் கமேனியின் மனைவி மன்சூரே கோஜஸ்தே பாகெர்சாதே உயிரிழந்ததாக பரவிய தகவலால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இருப்பினும், அவர் பாதுகாப்பாகவும் உயிருடன் இருப்பதாகவும் ஈரான் அரசு ஊடகம் தற்போது அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது.

இதற்கிடையில் அடுத்த தலைவராக அறிவிக்கப்பட்டுள்ள மொஜ்தபா கமேனி காயமடைந்ததாகக் கூறப்பட்ட தகவலையும் நிர்வாகம் மறுத்துள்ளது. மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க இராணுவத் தளங்களை அகற்ற வேண்டும் என எச்சரித்துள்ள அவர், ஹார்முஸ் ஜலசந்தியை மூடுவதாகவும் அறிவித்துள்ளார். இதன் மூலம் ஈரானின் புதிய தலைமை முழு ஆரோக்கியத்துடனும் உறுதியுடனும் இருப்பதை அரசு தெளிவுபடுத்தியுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *