ஈரான் ஆட்சியைத் தூக்கியெறிய அழைப்பு விடுத்த இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவின் அதிரடி எச்சரிக்கை

ஈரான் ஆட்சியைத் தூக்கியெறிய அழைப்பு விடுத்த இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவின் அதிரடி எச்சரிக்கை

ஈரானின் புதிய உச்ச தலைவர் மொஜ்தபா கமேனியை ‘புரட்சிகர காவல்படையின் கைப்பாவை’ என்று விமர்சித்துள்ள இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, தெஹ்ரானின் தற்போதைய ஆட்சி அதிகாரத்தை வேரோடு ஒழிக்கப்போவதாக எச்சரித்துள்ளார். ஈரானிய மக்கள் தங்கள் சுதந்திரத்திற்காகப் போராட வேண்டும் என்று அழைப்பு விடுத்த அவர், இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் கூட்டு நடவடிக்கைகளால் ஈரான் பலவீனமடைந்து வருவதாகவும், தற்போதைய ஆட்சிக்கு பாதுகாப்பு இல்லை என்றும் தெரிவித்தார்.

இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில், மொஜ்தபா கமேனி ஹார்முஸ் ஜலசந்தியைத் திறக்கப் போவதில்லை என்று உறுதியாகத் தெரிவித்துள்ளார். மேலும், பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களை மூட வேண்டும் என்றும், இல்லையெனில் கடும் தாக்குதல்கள் நடத்தப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். இரு நாடுகளுக்கும் இடையிலான இந்த நேரடி மோதல் போக்கு மத்திய கிழக்கு நாடுகளில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *