ஈரானின் எண்ணெய் வளத்தை கைப்பற்ற டொனால்ட் ட்ரம்ப் அதிரடி திட்டம்

வெனிசுலாவைத் தொடர்ந்து ஈரானின் பரந்த எண்ணெய் வளமும் அமெரிக்காவின் கட்டுப்பாட்டிற்குள் வருமா என்ற கேள்வி உலக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வெள்ளை மாளிகையில் நடந்த உயர்மட்ட கூட்டத்திற்குப் பிறகு அதிபர் டொனால்ட் ட்ரம்ப் வெளியிட்ட சூசகமான கருத்துக்கள் இந்த விவாதத்தை தூண்டியுள்ளன. அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து உலக எண்ணெய் சந்தையை ஆதிக்கம் செலுத்த முயற்சிப்பதாக ஈரான் குற்றம் சாட்டியுள்ளது. இந்த திட்டம் நிறைவேறினால் உலகின் 31 சதவீத எரிசக்தி சந்தை வாஷிங்டன் வசமாகும்.
ஈரானிய எண்ணெய் கிடங்குகள் மீதான இஸ்ரேலிய தாக்குதலுக்கு ட்ரம்ப் அதிருப்தி தெரிவித்துள்ள நிலையில், உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலையை கட்டுப்படுத்த வெள்ளை மாளிகை புதிய வரைபடத்தை தயாரித்துள்ளது. மத்திய கிழக்கின் எண்ணெய் வளங்கள் மீது அமெரிக்கா கொண்டுள்ள நீண்டகால ஆர்வம் தற்போது சர்வதேச சமூகத்தில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. சந்தையை சீராக்கவும் விநியோகத்தை இயல்பு நிலைக்கு கொண்டு வரவும் அமெரிக்க எரிசக்தி துறை தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.