இஸ்ரேல் மீது ஈரான் ஏவிய ஏவுகணைகளில் இந்தியாவிற்கு நன்றி தெரிவிப்பு

இஸ்ரேல் மீது ஈரான் நடத்திய 83வது கட்ட ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதலில் இந்தியாவிற்கு வினோதமான முறையில் நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏவுகணைகள் ஏவப்படுவதற்கு முன்பு, ஈரான் விமானப்படை அதிகாரிகள் அவற்றின் மீது இந்திய மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் வாசகங்களை எழுதியுள்ளனர். மும்பையிலுள்ள ஈரான் தூதரகம் இந்த ஏவுகணை செய்திகளின் படங்களைப் பகிர்ந்து இரு நாடுகளுக்கு இடையிலான நட்புறவை உறுதிப்படுத்தியுள்ளது.
ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து பாரசீக வளைகுடா பகுதியில் போர் தீவிரமடைந்துள்ளது. இந்த இக்கட்டான சூழலில் பாகிஸ்தான், ஸ்பெயின் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகளுடன் இந்தியாவிற்கும் ஈரான் தனது நன்றியை வெளிப்படுத்தியுள்ளது. இந்த ஏவுகணைத் தாக்குதல் மற்றும் அதில் இடம் பெற்றுள்ள செய்திகள் சர்வதேச அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.