இன்னும் 4 நாட்களே கெடு! இந்த 4 முக்கியமான வேலைகளை முடிக்காவிட்டால் சிக்கல் நிச்சயம்

இன்னும் 4 நாட்களே கெடு! இந்த 4 முக்கியமான வேலைகளை முடிக்காவிட்டால் சிக்கல் நிச்சயம்

நவம்பர் மாதம் முடிவடைய இன்னும் நான்கு நாட்களே உள்ள நிலையில், மிகவும் அவசரமான நான்கு பணிகளை முடிக்கத் தவறினால் ஓய்வூதியதாரர்கள் மற்றும் வங்கிக் வாடிக்கையாளர்கள் பெரும் சிக்கலைச் சந்திக்க நேரிடும். நவம்பர் 30 ஆம் தேதிதான் காலக்கெடு. இந்தக் காலக்கெடுவுக்குள் ஆயுள் சான்றிதழைச் (Life Certificate) சமர்ப்பிக்கத் தவறினால், டிசம்பர் மாதம் முதல் ஓய்வூதியம் நிறுத்தப்படும். அதேசமயம், பஞ்சாப் நேஷனல் வங்கி (PNB) வாடிக்கையாளர்களும் தங்கள் கேஒய்சி-யை (KYC) இந்த காலக்கெடுவுக்குள் புதுப்பிக்க வேண்டும், இல்லையெனில் பரிவர்த்தனைகள் முடக்கப்படலாம்.

மேலும், மத்திய அரசு ஊழியர்களுக்கு என்பிஎஸ்-லிருந்து (NPS) புதிய யுபிஎஸ் (UPS) ஓய்வூதியத் திட்டத்திற்கு மாறுவதற்கு இந்த நான்கு நாட்கள்தான் கடைசி வாய்ப்பு. மறுபுறம், வரி செலுத்துவோர் அக்டோபர் மாதத்திற்கான டிடிஎஸ் (TDS) செலான்-கம்-அறிக்கையை நவம்பர் 30-ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டியது கட்டாயம். சிக்கல்களைத் தவிர்க்க, காலக்கெடுவுக்கு முன் அனைத்துப் பணிகளையும் விரைந்து முடிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *