இனி சினிமாவில் பாடுவதில்லை? அர்ஜித் சிங்கின் அதிரடி முடிவால் ரசிகர்கள் அதிர்ச்சி!
February 10, 2026

திரைப்படப் பின்னணி பாடல்களில் இருந்து விடைபெறுவதாக அர்ஜித் சிங் அறிவித்துள்ளது இசை உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அண்மையில் கொல்கத்தாவில் நடந்த இசை நிகழ்ச்சியில், பிரபல சிதார் கலைஞர் அனுஷ்கா சங்கருடன் இணைந்து அவர் வழங்கிய இசை மேதமை, அவர் பாலிவுட் வணிக ரீதியான பாடல்களைத் தாண்டி ஒரு தனித்துவமான இசைப் பயணத்தைத் தொடங்கிவிட்டதை உறுதிப்படுத்தியுள்ளது.
ரசிகர்களுக்கு ஏற்படும் தாக்கம்:
- வெற்றிடம்: தினசரி பயணங்களிலும், தனிமையிலும் அர்ஜித்தின் குரலைத் துணையாகக் கொண்ட சாமானிய மக்களுக்கு, இனி புதிய திரைப்படப் பாடல்கள் வராது என்பது பெரும் ஏமாற்றத்தைத் தந்துள்ளளது.
- கச்சேரிகளே தஞ்சம்: இனி அவரது குரலை ரசிக்க நேரடி இசை நிகழ்ச்சிகள் அல்லது ஆல்பங்களை மட்டுமே நம்பியிருக்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.
- இசை மாற்றம்: ஒரு பின்னணி பாடகராக அறியப்பட்ட அர்ஜித், இனி தன்னை ஒரு முழுமையான தனித்துவ கலைஞராக (Independent Artist) முன்னிறுத்தப் போவதை இது காட்டுகிறது.
திரைப்பட இசை ஒரு சகாப்தத்தை இழக்கிறதா அல்லது அர்ஜித் சிங்கின் குரல் புதிய பரிமாணத்தை எட்டப்போகிறதா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.