இந்திய வம்சாவளி சபீர் கான் ஆப்பிளின் தலைமைப் பொறுப்பில், 30 ஆண்டுகளுக்குப் பிறகு COO ஆகிறார்

ஆப்பிள் தனது புதிய தலைமை இயக்க அதிகாரியாக (COO) சபீர் கானை அறிவித்துள்ளது, இவர் ஜெஃப் வில்லியம்ஸுக்குப் பதிலாக நியமிக்கப்படவுள்ளார். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இவர், 30 ஆண்டுகளாக ஆப்பிளில் பணியாற்றி, ஒவ்வொரு புதிய தயாரிப்பையும் சந்தைக்கு கொண்டு வருவதில் முக்கியப் பங்காற்றியுள்ளார். இவரது பதவி உயர்வு ஆப்பிளின் நீண்டகால திட்டமிடலின் ஒரு பகுதியாக கருதப்படுகிறது.
1966 இல் உத்தரப் பிரதேசத்தின் மொராதாபாத்தில் பிறந்த சபீர், 1995 இல் ஆப்பிளில் இணைந்தார். டஃப்ட்ஸ் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரம் மற்றும் மெக்கானிக்கல் இன்ஜினியரிங்கில் இளங்கலை பட்டமும், ரென்செலர் பாலிடெக்னிக் இன்ஸ்டிடியூட்டில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங்கில் முதுகலை பட்டமும் பெற்றுள்ளார். GE பிளாஸ்டிக்ஸிலும் இவருக்கு முன் அனுபவம் உண்டு. இந்த மாத இறுதிக்குள் தற்போதைய COO ஜெஃப் வில்லியம்ஸிடமிருந்து இவர் பொறுப்பேற்பார்.