இந்திய பேட்டுகளில் ரப்பர்? இலங்கை வீரரின் அதிரடி கருத்தால் கிரிக்கெட் உலகில் பரபரப்பு!

இந்திய பேட்டர்கள் களமிறங்கினாலே பந்துவீச்சாளர்களுக்கு கிலி ஏற்படுகிறதா? சூர்யகுமார் யாதவ் அல்லது ரிங்கு சிங்கின் அதிரடி ஆட்டத்தைப் பார்த்து இலங்கை கிரிக்கெட் வீரர் பானுகா ராஜபக்சே ஒரு விசித்திரமான கருத்தை தெரிவித்துள்ளார். இந்திய வீரர்களின் பேட்டுகளில் ஒரு சிறப்பு ரப்பர் அடுக்கு இருப்பதாகவும், அதை மற்றவர்களால் வாங்க முடியாது என்றும் அவர் கூறியுள்ளார். இந்த கருத்து தற்போது இணையதளங்களில் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது.
இருப்பினும், இந்த கருத்து வெறும் பாராட்டும் விதமாக சொல்லப்பட்டதா அல்லது ஒரு தீவிரமான குற்றச்சாட்டா? சர்ச்சை வெடித்த நிலையில், பானுகா ராஜபக்சே பின்வாங்கியுள்ளார். இந்திய கிரிக்கெட்டின் மேம்பட்ட உள்கட்டமைப்பு மற்றும் நவீன உபகரணங்களைப் புகழ்ந்து பேசவே தான் அவ்வாறு கூறியதாக அவர் விளக்கம் அளித்துள்ளார். இந்திய கிரிக்கெட்டின் ஆதிக்கத்தை குறைத்து மதிப்பிட முயல்கிறாரா அல்லது இது வெறும் நகைச்சுவையா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.