இந்தியாவில் சிக்கியுள்ள வெளிநாட்டினருக்கு ஒரு மாத விசா நீட்டிப்பு அதிரடி அறிவிப்பு
March 15, 2026

இந்தியாவில் தங்கியுள்ள வெளிநாட்டினரின் விசா மற்றும் இ-விசா காலத்தை ஒரு மாதத்திற்கு இலவசமாக நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. ஈரான் மீதான தாக்குதலுக்குப் பிறகு பயணத் தடையால் பாதிக்கப்பட்டவர்கள் கூடுதல் காலம் தங்கியதற்காக எந்தவித அபராதமும் செலுத்த வேண்டியதில்லை.
விமானப் போக்குவரத்து மீண்டும் சீரானவுடன் அவர்கள் தாயகம் திரும்ப அனுமதிக்கப்படுவார்கள். இந்த இக்கட்டான சூழலில் வெளிநாட்டு பயணிகளுக்கு உதவும் வகையில் இந்த சலுகை வழங்கப்பட்டுள்ளது.