இதுதாங்க உண்மையான காதல்… 150 கி.மீ கணவனை தோள்களில் சுமந்து பாதயாத்திரை சென்ற மனைவி… காண்போரை கலங்க வைக்கும் வைரல் வீடியோ!
July 21, 2025

உத்திரப்பிரதேசம்: உத்திரப்பிரதேசம் மாநிலத்தில் இரண்டு கால்களையும் இழந்த கணவனை தோள்களில் சுமந்து கொண்டு மனைவி பாதயாத்திரை சென்ற வீடியோ வெளியாகி பலரையும் கலங்க வைத்துள்ளது.
உத்திரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஆஷா என்ற பெண்ணின் கணவருடைய இரண்டு கால்களும் செயலிழந்து விட்டதால், அது சரியாக வேண்டும் என்று வேண்டுகோள் வைத்துள்ளார். தற்போது காவடியாத்திரை நடந்து கொண்டிருக்கும் நிலையில், தன்னுடைய தோள்களிலேயே கணவரை சுமந்து கொண்டு சுமார் 150 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஹரித்வாருக்கு பாதயாத்திரை சென்றுள்ளார். தேனிலவில் கணவனை கொல்வது, குளிர்பானத்தில் விஷம் வைத்துக் கொள்வது என விதவிதமான சம்பவங்கள் நடந்து கொண்டிருக்கும் இந்த காலத்தில், கணவர் மீது வைத்த காதல் காரணமாக மனைவி இவ்வாறு செய்துள்ள வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி பலருடைய கவனத்தையும் ஈர்த்துள்ளது.