ஆப்கானிஸ்தான் எல்லைக்குள் புகுந்து பாகிஸ்தான் போர் விமானம் நடத்திய தாக்குதலில் 28 பேர் உயிரிழப்பு
February 23, 2026

ஆப்கானிஸ்தானின் எல்லைப் பகுதிகளில் பாகிஸ்தான் நடத்திய வான்வழித் தாக்குதலில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 28 பேர் பலியாகினர். டிடிபி பயங்கரவாத முகாம்களை குறிவைத்து நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலை இந்தியா வன்மையாகக் கண்டித்துள்ளது. ஆப்கானிஸ்தானின் இறையாண்மைக்கு எதிரான இந்தச் செயல் சர்வதேச அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த அத்துமீறலுக்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு அமைச்சகம் எச்சரித்துள்ளது. ரமலான் மாதத்தில் நடத்தப்பட்ட இந்த தாக்குதலால் இரு நாடுகளுக்கு இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ளது.