ஆப்கானிஸ்தான் எல்லைக்குள் பாகிஸ்தான் நடத்திய வான்வழித் தாக்குதலில் எண்பது பேர் உயிரிழப்பு

ஆப்கானிஸ்தானின் நங்கர்ஹர், பக்திகா மற்றும் கோஸ்ட் ஆகிய மாகாணங்களில் உள்ள தீவிரவாத முகாம்களை இலக்கு வைத்து பாகிஸ்தான் இராணுவம் அதிரடி வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளது. பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் மற்றும் பன்னு பகுதிகளில் அண்மையில் நடந்த தற்கொலைப்படைத் தாக்குதல்களுக்குப் பதிலடியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதில் தெஹ்ரீக்-இ-தாலிபான் பாகிஸ்தான் மற்றும் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பைச் சேர்ந்த எண்பதுக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆப்கான் மண்ணைப் பயன்படுத்தி பாகிஸ்தானுக்கு எதிராகத் தீவிரவாதச் செயல்கள் தூண்டப்படுவதாக இஸ்லாமாபாத் குற்றம் சாட்டியுள்ளது. இது சர்வதேச உடன்படிக்கைகளை மீறும் செயல் என பாகிஸ்தான் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இருப்பினும், தங்கள் நிலப்பரப்பில் தீவிரவாதக் குழுக்கள் இல்லை என்றும், இது பாகிஸ்தானின் உள்நாட்டுப் பாதுகாப்புப் பிரச்சினை என்றும் காபூல் நிர்வாகம் திட்டவட்டமாக மறுத்துள்ளது.