ஆசிய கோப்பையில் பரபரப்பு! சூப்பர்-4 சுற்றுக்கு தகுதி பெறுமா இலங்கை? சமன்பாடு என்ன?

ஆசிய கோப்பையில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றுவிட்டன. ஆனால், குரூப்-பி பிரிவில் இன்னும் பரபரப்பு தொடர்கிறது. இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான அடுத்த போட்டி மூன்று அணிகளின் தலைவிதியை தீர்மானிக்கும். இலங்கை 4 புள்ளிகளுடன் பட்டியலில் முதலிடத்தில் இருந்தாலும், அதன் சூப்பர் 4 இடம் இன்னும் உறுதியாகவில்லை.
இந்த போட்டியில் இலங்கை வெற்றி பெற்றால், வங்கதேசத்துடன் சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெறும். மாறாக, ஆப்கானிஸ்தான் வெற்றி பெற்றால், மூன்று அணிகளும் சம புள்ளிகளைப் பெறும். அப்போது, நிகர ரன் ரேட் அடிப்படையில் அடுத்த சுற்றுக்கு தகுதி பெறும் அணி தீர்மானிக்கப்படும். சிறந்த நிகர ரன் ரேட் கொண்ட ஆப்கானிஸ்தானுக்கு அதிக வாய்ப்புள்ளது. எனவே, வங்கதேச ரசிகர்கள் ஆப்கானிஸ்தான் பெரிய அளவில் வெற்றிபெற வேண்டும் என்று