அர்ஜென்டினா பிரேசிலை 4-1 என்ற கணக்கில் தோற்கடித்து உலகக் கோப்பை வாய்ப்பை உறுதி செய்தது

அர்ஜென்டினா, 2026 உலகக் கோப்பை தகுதிச்சுற்றுக்கு தகுதி பெற்றதை பிரமாண்டமாகக் கொண்டாடியது. செவ்வாய்க்கிழமை புவனஸ் ஐர்ஸில் நடந்த போட்டியில், அவர்கள் எதிரணியான பிரேசிலை 4-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தினர்.
ஜூலியன் ஆல்வாரேஸ், என்சோ பெர்னாண்டஸ், அலெக்சிஸ் மாக் அலிஸ்டர் மற்றும் ஜூலியனோ சிமியோனே ஆகியோர் அர்ஜென்டினாவிற்கு அபார வெற்றியைத் தேடித் தந்தனர். முன்னதாக, போலிவியா-உருகுவே மோதிய போட்டியில் 0-0 என்ற சமனுக்கு பிறகு அர்ஜென்டினாவின் உலகக் கோப்பை வாய்ப்பு உறுதிசெய்யப்பட்டது.
போட்டி தொடங்கும் முன்பே ஸ்டேடியம் கொண்டாட்ட சூழலில் இருந்தது. ஆட்டம் தொடங்கிய ஆறாவது நிமிடத்திலேயே ஆல்வாரேஸ் முதல் கோலை அடித்து அர்ஜென்டினாவிற்கு முன்னிலை பெற்றார். அதற்கு பின்னர் பெர்னாண்டஸ், மாக் அலிஸ்டர் மற்றும் சிமியோனே ஆகியோர் தொடர்ந்து கோல்களை அடித்து பிரேசிலை துவம்சம் செய்தனர். இதன் மூலம் அர்ஜென்டினா, அமெரிக்கா, மெக்சிகோ மற்றும் கனடாவில் நடைபெறவுள்ள 2026 உலகக் கோப்பைக்கு தகுதி பெற்றது.
தென் அமெரிக்க தகுதிசுற்றில் அர்ஜென்டினா முதலிடத்தில் 31 புள்ளிகளுடன் உள்ளது. பிரேசில் நான்காவது இடத்தில் உள்ளது. ஏக்வடார், உருகுவே, கொலம்பியா, வெனிசுலா ஆகிய அணிகள் தகுதிக்கான போராட்டத்தில் உள்ளன.