அருந்ததி ராயின் இந்தியாவுக்கு எதிரான கருத்து சமூக ஊடகங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது

பிரபல எழுத்தாளர் அருந்ததி ராய், இந்தியாவின் இராணுவக் கொள்கைகள் குறித்து அண்மையில் தெரிவித்த கருத்துக்களால் மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார். பல இந்திய மாநிலங்களில் இந்திய அரசு அதன் சொந்த மக்களுக்கு எதிராக நிரந்தரப் போரை நடத்தியுள்ளதாகக் குற்றம்சாட்டி, இந்தியாவின் இராணுவக் கொள்கைகளை பாகிஸ்தானின் இராணுவக் கொள்கைகளோடு ஒப்பிட்டுப் பேசியுள்ளார். இந்த அறிக்கை சமூக ஊடகங்களிலும் அரசியல் வட்டாரங்களிலும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
அவரது கருத்துக்கள் ‘தேசத்திற்கு எதிரானது’ என்று பலர் குறிப்பிட்டுள்ளனர். முன்னாள் இராஜதந்திரி கன்வல் சிபல் உட்பட பல முக்கிய பிரமுகர்கள் அவரது கருத்தைக் கடுமையாக கண்டித்துள்ளனர். பாகிஸ்தான் அதன் சொந்த மக்களுக்கு எதிராக மேற்கொண்ட பல இராணுவ நடவடிக்கைகளை மேற்கோள் காட்டி, ராயின் கூற்றுகளின் துல்லியத்தை சிபல் கேள்விக்குள்ளாக்கினார். மேலும், இந்துக்களுக்கு எதிரான மற்றும் இந்தியாவுக்கு எதிரான நிகழ்ச்சி நிரலை அவர் ஊக்குவிப்பதாகவும் குற்றம் சாட்டினார்.