அரசு கல்லூரிகள் ஜூன் 30–ம் தேதி திறப்பு..
May 29, 2025

தமிழக அரசின் கீழ் செயல்படும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் ஜூன் 30-ம் தேதி முதல் திறக்கப்பட உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிளஸ் 2 முடித்த மாணவர்கள், உயர்கல்விக்காக அரசு கல்லூரிகளில் பட்டப்படிப்பு பயிலும் எண்ணத்தில் பல்வேறு துறைகளில் விண்ணப்பித்துள்ளனர். இதனையடுத்து, அரசு கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான பொதுக் கலந்தாய்வு ஜூன் 4-ம் தேதி தொடங்கி ஜூன் 14-ம் தேதி வரை நடைபெற உள்ளது.
கலந்தாய்வு முடிந்ததும் மாணவர் சேர்க்கை செயல்முறை முடிக்கப்படும். அதன் பின்னர், புதிய கல்வியாண்டுக்கான வகுப்புகள் ஜூன் 30-ம் தேதி முதல் தொடங்கும் என உயர் கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வகுப்புகள் நேரடியாக கல்லூரிகளில் நடைபெற உள்ளன. மாணவர்கள் நேரத்தில் வகுப்புகளில் கலந்து கொண்டு கல்வியை தொடரும்படி அறிவுறுத்தப்படுள்ளனர்.