அமைதியாக உயிரைக் கவரும் பேராபத்து பீரிபெரல் ஆர்டரி நோய், சிகிச்சை தாமதித்தால் கால் வெட்டும் அபாயம்
August 23, 2025

பீரிபெரல் ஆர்டரி நோய் (PAD) என்பது காலில் உள்ள இரத்த நாளங்கள் குறுகி, இரத்த ஓட்டம் தடைப்படும் மிகக் கடுமையான நிலை. இதனால் காலில் வலி, புண் அல்லது கரும்புள்ளி ஏற்படும்; கவனிக்காமல் விட்டால் காங்கிரீன் ஏற்பட்டு காலைக் கூட வெட்ட வேண்டிய நிலை வரலாம். குறிப்பாக 65 வயதுக்கு மேற்பட்டோர் மற்றும் நீரிழிவு நோயாளிகளில் அபாயம் அதிகம்.
லெஸ்டரிலுள்ள க்ளென்பீல்ட் மருத்துவமனையின் ஆய்வில், துரித சிகிச்சை பெற்றால் கால்கள் வெட்டப்பட வேண்டிய அபாயம் 57% வரை குறையக்கூடும் என தெரியவந்துள்ளது. ஆரம்ப அறிகுறிகள் தெரிந்தவுடன் மருத்துவரை அணுகுவது அவசியம். புகைபிடித்தலை நிறுத்துதல், உடற்பயிற்சி மற்றும் நீரிழிவு கட்டுப்பாடு ஆகியவை தடுப்பிற்கு உதவும்.