அமெரிக்க தேர்தல் முறை: இந்தியாவை பின்பற்ற தயாராகும் டிரம்ப்

வாஷிங்டன்: அமெரிக்க தேர்தல் முறையில் கடுமையான மாற்றங்களை கொண்டு வர முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் தீர்மானித்துள்ளார். இந்தியா போன்ற நாடுகளில் அமல்படுத்தப்படும் திடமான தேர்தல் நடைமுறைகளை அமெரிக்காவிலும் அறிமுகப்படுத்த வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
அமெரிக்கர்களின் வாக்குரிமையை உறுதிப்படுத்த புதிய உத்தரவில் கையெழுத்திட்ட டிரம்ப், இனி வாக்களிக்க வரும் அனைவரும் தங்கள் குடியுரிமையை நிரூபிக்க பாஸ்போர்ட் அல்லது பிறப்புச் சான்றிதழை கட்டாயமாக வழங்க வேண்டும் என்று அறிவித்துள்ளார். மேலும், தேர்தல் மோசடிகளைத் தடுப்பதற்காக, அனைத்து மாநிலங்களும் தங்கள் வாக்காளர் பட்டியலை மத்திய உள்துறை அமைச்சகத்துக்கும் அரசு திறமைத்திறன் துறைக்கும் அனுப்ப வேண்டும். இது செய்யப்படவில்லை என்றால் அந்த மாநிலங்களுக்கு மத்திய அரசின் நிதியுதவி நிறுத்தப்படும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.
அத்துடன், தேர்தலுக்கு பிறகு அஞ்சல் மூலம் வரும் வாக்குகளை இனி ஏற்க முடியாது என்றும் QR code மற்றும் Barcode உள்ள வாக்குசீட்டுகளும் செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா, பிரேசில் போன்ற நாடுகளில் தேர்தல் பாதுகாப்பு கடுமையாக கடைப்பிடிக்கப்படுவதை மேற்கோள்காட்டிய டிரம்ப், “அமெரிக்கா இனி இந்த நாடுகளின் பாதையில் பயணிக்கும்” என தெரிவித்துள்ளார். இந்த மாற்றங்கள் 2020 தேர்தலில் ஏற்பட்ட சர்ச்சைகளுக்குப் பின்னர் டிரம்ப் எடுத்துள்ள முக்கிய முடிவாக கருதப்படுகிறது.