அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தவிர மற்ற நாடுகளுக்கு ஹார்முஸ் ஜலசந்தி திறந்திருக்கும் என ஈரான் அறிவிப்பு

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தவிர மற்ற நாடுகளுக்கு ஹார்முஸ் ஜலசந்தி திறந்திருக்கும் என ஈரான் அறிவிப்பு

மேற்கு ஆசியாவில் அதிகரித்து வரும் பதற்றங்களுக்கு மத்தியில் ஹார்முஸ் ஜலசந்தி முழுமையாக மூடப்படவில்லை என்று ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி தெளிவுபடுத்தியுள்ளார். இந்த மூலோபாய நீர்வழிப்பாதை உலகின் பெரும்பாலான நாடுகளுக்கு பாதுகாப்பானது என்று அவர் கூறினார். இருப்பினும், ஈரான் மற்றும் அதன் நட்பு நாடுகளைத் தாக்கும் நாடுகளுக்கு இந்தப்பாதையைப் பயன்படுத்த அனுமதி இல்லை. குறிப்பாக அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய கப்பல்கள் அல்லது டேங்கர்கள் இந்த ஜலசந்தி வழியாகச் செல்ல அனுமதிக்கப்படமாட்டாது என்று அவர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

உலக வர்த்தகத்தின் முக்கியப் பாதையான இதில் ஈரான் தனது தடையை நீக்கினாலும், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இதனை ஒரு செயற்கைத் தடை என்று கூறி எச்சரித்துள்ளார். கப்பல்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அந்தப் பகுதியில் கடற்படையை நிலைநிறுத்துமாறு அவர் சம்பந்தப்பட்ட நாடுகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார். தற்போதைய போர் சூழலிலும் ரஷ்யா மற்றும் சீனாவுடன் ஈரானின் ஒத்துழைப்பு தொடர்கிறது. அதே நேரத்தில், இந்த பதற்றத்தால் உலக சந்தையில் எரிபொருள் விநியோகம் பாதிக்கப்படலாம் என்று சர்வதேச சமூகம் கவலை அடைந்துள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *