அமெரிக்காவின் புதிய வரி விதிப்பால் இந்திய ஏற்றுமதியாளர்கள் அதிர்ச்சி பல கோடி மதிப்பிலான சரக்குகள் நிறுத்தம்

அமெரிக்காவின் புதிய வரி விதிப்பால் இந்திய ஏற்றுமதியாளர்கள் அதிர்ச்சி பல கோடி மதிப்பிலான சரக்குகள் நிறுத்தம்

அமெரிக்காவின் இறக்குமதி வரி தொடர்பான நிச்சயமற்ற தன்மையால் இந்திய ஜவுளி, ஆபரணங்கள் மற்றும் கடல் உணவு ஏற்றுமதியாளர்கள் பெரும் பாதிப்படைந்துள்ளனர். அமெரிக்க உச்சநீதிமன்றத் தீர்ப்பைத் தொடர்ந்து, அதிபர் டிரம்ப் 15 சதவீத புதிய உலகளாவிய வரியை விதித்துள்ளதால், இந்திய வணிகர்கள் தங்களின் ஏற்றுமதிப் பணிகளைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளனர்.

குறிப்பாக இறால் மற்றும் ஆபரணத் துறையில் பெரும் தேக்கம் ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டு 2.4 பில்லியன் டாலர் மதிப்பிலான இறால் ஏற்றுமதி செய்யப்பட்ட நிலையில், தற்போது அமெரிக்க வாங்குபவர்களின் அறிவுறுத்தலின்படி விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. சுமார் 10 பில்லியன் டாலர் மதிப்பிலான ஆபரண ஏற்றுமதியும் ஒரு வார காலத்திற்கு முடக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *