அமிதாப், ரேகா, ஜெயா பச்சன் முக்கோண காதல் கதை; அமிதாப் ரேகாவுடன் நெருக்கமாக இருந்ததைக் கண்ட ஜெயா கண்ணீர் விட்டது ஏன்?

பாலிவுட்டில் அமிதாப் பச்சன், ஜெயா பச்சன் மற்றும் ரேகாவின் காதல் முக்கோணம் மிகவும் பிரபலமான ஒன்று. ‘முகதார் கா சிகந்தர்’ திரைப்படத்தின்போது, அமிதாப் பச்சன் மற்றும் ரேகா நெருக்கமாக இருந்ததைக் கண்டு ஜெயா பச்சன் கண் கலங்கியதாகக் கூறப்படுகிறது. அந்தத் திரைப்படம் வெளியாவதற்கு முன், படக்குழுவினருக்கு மட்டும் பிரத்யேக காட்சி திரையிடப்பட்டது. அப்போது, அமிதாப் தனது பெற்றோருடன் பின் வரிசையிலும், ஜெயா முன் வரிசையிலும் அமர்ந்திருந்தனர்.
அப்போது, ரேகா, ஜெயா பச்சன் கண்ணீர் விட்டதை கவனித்ததாகக் கூறப்படுகிறது. ஒரு நேர்காணலில், கணவர் இன்னொரு நடிகையுடன் நெருக்கமாக இருந்ததைக் கண்டதால் ஜெயா கண் கலங்கியதாக ரேகா தெரிவித்தார். இந்தச் சம்பவத்துக்குப் பிறகு, அமிதாப் ரேகாவுடன் படங்களில் நடிப்பதை தவிர்த்ததாக கூறப்படுகிறது. இருப்பினும், 1981-ஆம் ஆண்டு ‘சில்சிலா’ படத்தில் இருவரும் மீண்டும் இணைந்து நடித்தனர். இப்போதும் கூட ரேகா ஜெயாவை ‘திதிபாய்’ என்று அன்புடன் அழைக்கிறார்.