அடுத்த குறி ரன்வீர் சிங்? லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் விடுத்த மிரட்டலால் பாலிவுட்டில் பதற்றம்!
February 10, 2026

இயக்குநர் ரோஹித் ஷெட்டியைத் தொடர்ந்து, தற்போது பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கிற்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலின் பெயரில் ரன்வீருக்கு வந்த ஒரு மிரட்டல் குரல் பதிவு (Voice Note), அவரிடமிருந்து பெருந்தொகையை கேட்டு மிரட்டியுள்ளது.
தொடர்ச்சியாக முன்னணி நட்சத்திரங்கள் குறிவைக்கப்படுவது பாலிவுட் வட்டாரத்தில் கடும் அச்சத்தை உருவாக்கியுள்ளது. இச்சம்பவத்தைத் தொடர்ந்து மும்பை காவல்துறை ரன்வீர் சிங்கின் இல்லத்திற்கு பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளதுடன், தீவிர விசாரணையில் இறங்கியுள்ளது. நட்சத்திரங்களுக்கே இந்த நிலை என்றால் சாமானியர்களின் பாதுகாப்பு என்னவாகும் என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.