அசாம் முதல்வர் மீது உச்சநீதிமன்றத்தில் வழக்கு: கம்யூனிஸ்ட் தலைவி அதிரடி!
February 10, 2026

அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மாவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (CPIM) தலைவி ஆனி ராஜா உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், “அசாம் முதலமைச்சரின் சர்ச்சைக்குரிய மற்றும் வெறுப்பைத் தூண்டும் பேச்சுகள் தொடர்பாக நீதிமன்றம் அவசரமாக தலையிட வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். சமீபத்திய வீடியோ ஒன்றில், ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மீது ஹிமந்த பிஸ்வா சர்மா துப்பாக்கிச் சூடு நடத்துவது போன்ற (அடையாளப்பூர்வமாக) காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இது தொடர்பாக ஏற்கனவே புகார் அளிக்கப்பட்ட போதிலும், இதுவரை எந்த ஒரு எஃப்.ஐ.ஆர் (FIR) கூட பதிவு செய்யப்படவில்லை,” எனத் தெரிவித்துள்ளார்.