ஹோர்மூஸ் நீரிணையில் இந்திய கப்பல்களுக்கு அனுமதி வழங்கி ஈரான் தூதர் அதிரடி அறிவிப்பு
March 13, 2026

இந்தியா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையிலான நட்புறவை உறுதிப்படுத்தும் வகையில், ஹோர்மூஸ் நீரிணை வழியாக இந்திய கப்பல்கள் பாதுகாப்பாக பயணிக்க ஈரான் அரசு அனுமதி அளித்துள்ளது. இது குறித்து இந்தியாவுக்கான ஈரான் தூதர் முகமது ஃபதாலி கூறுகையில், இரு நாடுகளும் பொதுவான நலன்களைப் பகிர்ந்து கொள்வதால் இந்த முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
தற்போது சுமார் 27 இந்திய கப்பல்கள் இந்தப் பகுதியில் காத்திருப்பதாகக் கூறப்படுகிறது. சர்வதேச அளவில் நிலவும் போர் பதற்றத்தால் இந்த நீரிணை முடக்கப்பட்டிருந்த நிலையில், ஈரானின் இந்த அறிவிப்பு வர்த்தக ரீதியாக மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது. இருப்பினும், இந்த விவகாரத்தில் இந்திய மத்திய அரசிடம் இருந்து இதுவரை அதிகாரப்பூர்வ தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை.