ஹோர்முஸ் நீரிணை மூடலால் ஒரு லிட்டர் எண்ணெய் கூட ஏற்றுமதி செய்ய முடியாது என அமெரிக்காவிற்கு ஈரான் கடும் சவால்
March 10, 2026

ஓமனுக்கும் ஈரானுக்கும் இடைப்பட்ட ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டதால் சர்வதேச எரிசக்தி சந்தையில் கச்சா எண்ணெய் விநியோகம் முடங்கியுள்ளது. இதன் விளைவாக கச்சா எண்ணெய் விலை ஒரு பேரல் 120 டாலரை நெருங்கி நான்கு ஆண்டுகளில் இல்லாத உச்சத்தைத் தொட்டுள்ளது. இந்த நிலை தொடர்ந்தால் உலகளவில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் அதிகரித்துள்ளது.
ஈரானின் உள்கட்டமைப்புகள் மீது அமெரிக்காவோ அல்லது இஸ்ரேலோ தாக்குதல் நடத்தினால் இப்பிராந்தியத்திலிருந்து ஒரு சொட்டு எண்ணெய் கூட வெளியேற அனுமதிக்க மாட்டோம் என ஐஆர்ஜিসি எச்சரித்துள்ளது. இதற்குப் பதிலடியாக ஈரான் மீது 20 மடங்கு தீவிரமான தாக்குதல் நடத்தப்படும் என டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளதால் பெரும் போர் பதற்றம் நிலவுகிறது.