விமானப் பாதைகளில் சிக்கல் மற்றும் கட்டண உயர்வால் இந்தியர்களின் வெளிநாட்டுப் பயணம் பாதிப்பு

விமானப் பாதைகளில் சிக்கல் மற்றும் கட்டண உயர்வால் இந்தியர்களின் வெளிநாட்டுப் பயணம் பாதிப்பு

ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே அதிகரித்து வரும் போர் பதற்றம் இந்திய சுற்றுலாத் துறையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு ஆசிய வான்வழிப் பாதைகள் மூடப்படுவதால், விமான நிறுவனங்கள் நீண்ட தூரம் சுற்றிச் செல்ல வேண்டியுள்ளது. இதன் காரணமாக எரிபொருள் செலவு அதிகரித்து, சர்வதேச விமான பயணச்சீட்டுகளின் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளது.

இந்த நிச்சயமற்ற சூழலால் பல இந்திய குடும்பங்கள் தங்களது வெளிநாட்டுப் பயணங்களைத் ரத்து செய்து வருகின்றனர். ஐரோப்பா மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளுக்குச் செல்லும் பயண நேரம் அதிகரித்துள்ளதால், சுற்றுலாப் பயணிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். தற்போது பாதுகாப்பு கருதி பலர் தங்களது பயணத் திட்டங்களை மாற்றியமைத்து, அருகிலுள்ள நாடுகளுக்குச் செல்ல ஆர்வம் காட்டி வருகின்றனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *