வயிற்று உபாதையா அல்லது மன பதற்றமா ஒரு சிறிய தவறு உயிருக்கே ஆபத்தாகலாம்

வயிற்று உபாதையா அல்லது மன பதற்றமா ஒரு சிறிய தவறு உயிருக்கே ஆபத்தாகலாம்

செய்தி பிரிவு : வயிற்று உப்புசம் அல்லது நெஞ்சு படபடப்பு ஏற்படும் போது நாம் பெரும்பாலும் அதை சாதாரண கேஸ் தொல்லை என்று நினைத்து விடுகிறோம். ஆனால், இது தீவிரமான ‘பேனிக் அட்டாக்’ அல்லது மன பதற்றத்தின் அறிகுறியாகவும் இருக்கலாம் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். செரிமான கோளாறுகளால் ஏற்படும் அறிகுறிகள் உணவுடன் தொடர்புடையவை. ஆனால், மன பதற்றத்தின் போது அதிக வியர்வை, கை கால் நடுக்கம் மற்றும் இதயத் துடிப்பு அதிகரித்தல் போன்ற மாற்றங்கள் ஏற்படும். இந்த வேறுபாட்டை உணராமல் தவறான மருந்துகளை உட்கொள்வது பெரும் ஆபத்தை விளைவிக்கும்.

நெஞ்சு வலி அல்லது மூச்சுத் திணறல் 15-20 நிமிடங்களுக்கு மேல் நீடித்தாலோ அல்லது அந்த வலி தாடை மற்றும் இடது கைக்கு பரவினாலோ அது மாரடைப்பின் அறிகுறியாகவும் இருக்கலாம். பல நேரங்களில் மக்கள் தீவிர பதற்றத்தை சாதாரண கேஸ் என்று கருதி அலட்சியப்படுத்துகின்றனர், இது உயிருக்கு ஆபத்தானதாக முடியும். எனவே, இத்தகைய அறிகுறிகள் தென்படும் போது சுயமாக மருந்து எடுப்பதைத் தவிர்த்து, உடனடியாக மருத்துவரை அணுகி சரியான காரணத்தைக் கண்டறிவதே பாதுகாப்பானது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *