ரேஷன் அட்டைதாரர்கள் கவனம்: கைரேகை பதிவு கடைசி தேதி நெருங்குகிறது
March 26, 2025

ரேஷன் அட்டை வைத்திருப்பவர்கள் அனைவரும் தாமதிக்காமல் விரைவாக கைரேகை பதிவை மேற்கொள்ள வேண்டும் என்று அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. வரும் மார்ச் 31ஆம் தேதி கைரேகை பதிவு செய்வதற்கான கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தவறினால், உங்கள் ரேஷன் அட்டை ரத்து செய்யப்படலாம் என்பதால் அனைத்து அட்டைதாரர்களும் விழிப்புடன் செயல்பட வேண்டியது அவசியமாகிறது.
பல மாதங்களாக கைரேகை பதிவு நடைபெற்று வந்த நிலையில், இன்னும் பலர் பதிவு செய்யாமல் உள்ளனர். அரசு பலமுறை அறிவிப்பு செய்தும் இன்னும் சிலர் இந்த அவசிய நடவடிக்கையை பூர்த்தி செய்யவில்லை. எனவே, உங்கள் கைரேகை பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதை உறுதிப்படுத்தி, தவறி போனவர்கள் உடனடியாக அருகிலுள்ள ரேஷன் கடையில் பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. கால அவகாசம் நெருங்கி வருவதால், தாமதம் செய்யாமல் உடனே செயற்படுங்கள்.