ரயில் AC கோச்சில் பெண் பயணி புகைபிடித்த சம்பவம், கண்டனம் தெரிவித்து பயணிகள் வாக்குவாதம்
September 16, 2025

ரயிலின் ஏசி கோச்சில் பெண் பயணி ஒருவர் புகைபிடிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில், பெண் பயணி ஒருவர் தன் இருக்கையில் அமர்ந்து புகைபிடித்தபடி இருக்கிறார். அருகில் உள்ள பயணிகள் எதிர்ப்பு தெரிவித்து, புகையிழக்க வேண்டாம் என அறிவுறுத்தியபோது, அவர் அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
பயணிகள் காவல்துறைக்கு அழைக்கவுள்ளதாகக் கூறியதும், அவர் சவால் விடுக்கும் விதமாக, “போலீஸை கூப்பிடுங்கள்” எனப் பதிலளித்தார். இந்தச் சம்பவம் எக்ஸ் (X – ட்விட்டர்) சமூக வலைதளத்தில் கடும் விமர்சனங்களை சந்தித்து வருகிறது. பலரும் ரயில்வே துறை உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த வீடியோ பரவியதைத் தொடர்ந்து, ரயில்வே அதிகாரிகள் அந்தப் பெண்ணை கண்டறியும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.