மேற்கு வங்கத் தேர்தல் தேதிகள் அறிவிப்பு பாஜக மற்றும் காங்கிரஸ் வரவேற்பு மம்தா கடும் எதிர்ப்பு

மேற்கு வங்கத் தேர்தல் தேதிகள் அறிவிப்பு பாஜக மற்றும் காங்கிரஸ் வரவேற்பு மம்தா கடும் எதிர்ப்பு
மேற்கு வங்கத்தில் உள்ள 294 தொகுதிகளுக்கு ஏப்ரல் 23 மற்றும் 29 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாகத் தேர்தல் நடைபெறவுள்ளது. கடந்த முறை எட்டு கட்டங்களாக நடந்த தேர்தல் தற்போது இரண்டாகக் குறைக்கப்பட்டது அரசியல் வட்டாரத்தில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த முடிவை பாஜக மற்றும் காங்கிரஸ் வரவேற்றுள்ள நிலையில், தேர்தல் ஆணையம் பாஜகவின் விருப்பப்படி செயல்படுவதாகத் திரிணமூல் காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.
மூன்றாவது முறையாக ஆட்சியைத் தக்கவைக்க மம்தா பானர்ஜி தீவிரமாக உள்ள நிலையில், அவருக்குப் போட்டியாக பாஜக களம் காண்கிறது. ஊழல் புகார்கள் மற்றும் ஊடுருவல் போன்ற பிரச்சனைகள் இந்தத் தேர்தலில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. இரண்டு கட்டத் தேர்தலே பாஜகவை வீழ்த்தப் போதும் என மம்தா தெரிவித்துள்ள நிலையில், பலமுனைப் போட்டியால் தேர்தல் களம் தற்போது சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.
மேற்கு வங்கத்தில் உள்ள 294 தொகுதிகளுக்கு ஏப்ரல் 23 மற்றும் 29 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாகத் தேர்தல் நடைபெறவுள்ளது. கடந்த முறை எட்டு கட்டங்களாக நடந்த தேர்தல் தற்போது இரண்டாகக் குறைக்கப்பட்டது அரசியல் வட்டாரத்தில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த முடிவை பாஜக மற்றும் காங்கிரஸ் வரவேற்றுள்ள நிலையில், தேர்தல் ஆணையம் பாஜகவின் விருப்பப்படி செயல்படுவதாகத் திரிணமூல் காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.
மூன்றாவது முறையாக ஆட்சியைத் தக்கவைக்க மம்தா பானர்ஜி தீவிரமாக உள்ள நிலையில், அவருக்குப் போட்டியாக பாஜக களம் காண்கிறது. ஊழல் புகார்கள் மற்றும் ஊடுருவல் போன்ற பிரச்சனைகள் இந்தத் தேர்தலில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. இரண்டு கட்டத் தேர்தலே பாஜகவை வீழ்த்தப் போதும் என மம்தா தெரிவித்துள்ள நிலையில், பலமுனைப் போட்டியால் தேர்தல் களம் தற்போது சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.