“மன்னிப்புக்கு தயார் இல்லை: குணால் கம்ரா உறுதிப்பாடு”
March 25, 2025

மஹாராஷ்டிராவின் துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவை பற்றிய காமெடி நிகழ்ச்சியில் கூறிய கருத்துக்காக மன்னிப்பு கோரப் போவதில்லை என பிரபல நகைச்சுவையாளர் குணால் கம்ரா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். தனது கருத்து உரிமையை விட முடியாது என்றும், சிறிய நகைச்சுவை கூட ஏற்க மனமில்லாத அதிகாரம் படைத்தவர்களுக்காக அவர் அடிபணியமாட்டார் என்றும் அவர் கூறினார்.
“நான் சட்டத்திற்கு விரோதமாக எதையும் பேசவில்லை. என் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படுவதாக இருந்தாலும் அதை சந்திக்க நான் தயாராக இருக்கிறேன்” என குணால் கம்ரா அறிவித்தார். கருத்து சுதந்திரத்துக்காக போராடுவதை உறுதியாக தொடர்வேன் என்றும், நகைச்சுவை என்பது சமூக விமர்சனத்தின் ஒரு முக்கிய வடிவம் என்பதை மறப்பதில்லை என்றும் அவர் வலியுறுத்தினார்.