மதுவுடன் சோடா அல்லது குளிர்பானங்களைக் கலந்து குடிப்பது ஆபத்தானதா புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு முன் தெரிந்துகொள்ள வேண்டியவை

புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது மதுவுடன் சோடா அல்லது குளிர்பானங்களைக் கலந்து குடிப்பது பலரது வழக்கமாக உள்ளது. ஆனால் இது ஆரோக்கியத்திற்கு பெரும் கேடு விளைவிக்கும் என மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். கார்பனேற்றப்பட்ட இந்த பானங்கள் மதுவை ரத்தத்தில் மிக வேகமாக கலக்கச் செய்வதால், போதை தலைக்கேறுவதுடன் கல்லீரலின் செயல்பாட்டையும் கடுமையாகப் பாதிக்கிறது. இதனால் கல்லீரல் பாதிப்பு மற்றும் உடல் பருமன் போன்ற பிரச்சனைகள் ஏற்படும் அபாயம் அதிகம் உள்ளது.
குளிர்பானங்களில் உள்ள அதிகப்படியான சர்க்கரை நீரிழிவு நோய்க்கு வழிவகுப்பதோடு, அடுத்த நாள் ஏற்படும் தலைவலியை (Hangover) மேலும் மோசமாக்குகிறது. மது அருந்துவதே உடல்நலத்திற்குத் தீங்கானது என்ற நிலையில், அதனுடன் ரசாயனங்கள் கலந்த பானங்களைச் சேர்ப்பது ஆபத்தை இரட்டிப்பாக்கும். எனவே, புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது இத்தகைய பழக்கங்களைத் தவிர்த்து விழிப்புணர்வுடன் இருப்பது அவசியமாகும்.