மதச்சார்பின்மை கொள்கையில் சமரசமே இல்லை என இஃப்தார் விழாவில் எடப்பாடி பழனிசாமி முழக்கம்

மதச்சார்பின்மை கொள்கையில் சமரசமே இல்லை என இஃப்தார் விழாவில் எடப்பாடி பழனிசாமி முழக்கம்

சென்னையில் அதிமுக சார்பில் நடைபெற்ற இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, சமூக நல்லிணக்கம் மற்றும் மதச்சார்பின்மை கொள்கையிலிருந்து அதிமுக ஒருபோதும் பிறழாது என உறுதிபடத் தெரிவித்தார். சிறுபான்மையின மக்களின் நலனைப் பாதுகாப்பதில் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா வழியில் அதிமுக என்றும் துணை நிற்கும் என்றார்.

திமுக அரசு சிறுபான்மையினரை ஏமாற்றுவதாகக் குற்றம் சாட்டிய அவர், அதிமுக ஆட்சிக்காலமே அவர்களுக்கான பொற்காலம் எனக் குறிப்பிட்டார். இந்நிகழ்வில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், டிடிவி தினகரன் உள்ளிட்ட கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பங்கேற்று சமூக ஒற்றுமையை வலியுறுத்தினர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *