பெண் சக்தியின் எழுச்சியே வளர்ந்த பாரதத்தின் அடையாளம் என குடியரசுத் தலைவரும் பிரதமரும் புகழாரம்

பெண் சக்தியின் எழுச்சியே வளர்ந்த பாரதத்தின் அடையாளம் என குடியரசுத் தலைவரும் பிரதமரும் புகழாரம்

சர்வதேச பெண்கள் தின விழாவில் உரையாற்றிய குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பெண்கள் தங்கள் முழு ஆற்றலை உணர்ந்து செயல்பட வேண்டும் என வலியுறுத்தினார். கல்வி, பாதுகாப்பு, தொழில்நுட்பம் மற்றும் விளையாட்டு என அனைத்துத் துறைகளிலும் பெண்களின் பங்களிப்பு அபாரமானது என்று அவர் பாராட்டினார். குறிப்பாக, சுய உதவிக் குழுக்கள் மூலம் கிராமப்புற பெண்கள் பொருளாதாரத் தற்சார்பு அடைவது நாட்டின் வளர்ச்சிக்கு வலுசேர்ப்பதாக அவர் குறிப்பிட்டார்.

பிரதமர் நரேந்திர மோடி விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், நாட்டின் முன்னேற்றத்தில் பெண்களின் ஈடு இணையற்ற ஆர்வத்தைப் போற்றினார். பெண்களின் சாதனைகள் தேசத்திற்கு ஊக்கமளிப்பதோடு, வளர்ந்த பாரதத்தை உருவாக்கும் தீர்மானத்தை உறுதிப்படுத்துகின்றன என்றார். அனைத்துத் துறைகளிலும் பெண்கள் காட்டும் உறுதி, நாட்டின் வளமான எதிர்காலத்திற்கு வழிகாட்டும் என்றும் பிரதமர் தனது செய்தியில் தெரிவித்துள்ளார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *