பெங்களூருவில் மின்சாரக் கம்பியால் கழுத்து நெரிக்கப்பட்ட ரஞ்சிதா கொலை வழக்கின் திடுக்கிடும் பின்னணி

பெங்களூருவில் மின்சாரக் கம்பியால் கழுத்து நெரிக்கப்பட்ட ரஞ்சிதா கொலை வழக்கின் திடுக்கிடும் பின்னணி

பெங்களூரு வர்த்தூர் பகுதியில் லிவ்-இன் உறவில் இருந்த ரஞ்சிதா என்ற 23 வயது இளம்பெண், அவரது காதலன் அய்யப்பாவால் மின்சாரக் கம்பியால் கழுத்து நெரிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். கடந்த மார்ச் 12 அன்று இருவருக்கும் இடையே ஏற்பட்ட கடும் வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த அய்யப்பா இந்த கொடூரச் செயலைச் செய்துள்ளார். கொலையை மறைக்க ரஞ்சிதா தற்கொலை செய்ததாக நாடகமாடிய அய்யப்பாவின் பொய் போலீஸ் விசாரணையில் அம்பலமானது.

பெற்றோரின் புகாரைத் தொடர்ந்து நடத்தப்பட்ட பிரேதப் பரிசோதனையில், இது திட்டமிட்ட கொலை என்பது உறுதியானது. போலீசாரின் கிடுக்கிப்பிடி விசாரணையில் அய்யப்பா தனது குற்றத்தை ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *