பூனை வளர்த்தால் மாரடைப்பு அபாயம் 30% குறையுமா? நம்ப முடியாத ஆரோக்கிய நன்மைகள் இதோ

வீட்டில் வளர்க்கப்படும் செல்லப்பிராணிகளில் பூனைகள் அதிக வரவேற்பைப் பெற்று வருகின்றன. இந்த சாதுவான விலங்கு ஒரு நண்பனாக இருப்பது மட்டுமல்லாமல், பூனை வளர்ப்பது ஆரோக்கியத்தை கணிசமாக மேம்படுத்தும் என்று பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பூனையுடன் நேரத்தைச் செலவிடுவது மன அழுத்தத்தைக் குறைக்கிறது, இதனால் இதய நோய் ஏற்படும் அபாயம் கிட்டத்தட்ட 30 சதவிகிதம் வரை குறையலாம். மேலும், பூனையின் தனித்துவமான ‘மியாவ்’ ஒலி (20-140 ஹெர்ட்ஸ்), தசை மற்றும் எலும்பு அழற்சியைக் குணப்படுத்துவதில் ஒரு சிகிச்சை போல செயல்பட முடியும்.
வீட்டில் பூனை இருந்தால் குழந்தைகளுக்கு பல்வேறு ஒவ்வாமைகள் (allergies) வருவதற்கான ஆபத்து குறைகிறது என்பதையும் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். பூனையின் இருப்பு, கோபம், பதட்டம் மற்றும் மன அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும் இரசாயனங்கள் வெளியாவதற்கு உதவுகிறது, இது நல்ல உறக்கத்திற்கும் துணையாகும். எனவே, ஒரு பூனை எலிகளை விரட்டுவதோடு மட்டுமல்லாமல், நீங்கள் ஆரோக்கியமாகவும், புத்துணர்ச்சியுடனும், வாழ்க்கையில் அதிக அக்கறை கொண்டவராகவும் இருக்க தூண்டுகிறது.