பிரபல இசையமைப்பாளர் ஆரேலியோ மார்டினெஸ் விமான விபத்தில் பலி

பிரபல இசையமைப்பாளர் ஆரேலியோ மார்டினெஸ் விமான விபத்தில் பலி

மத்திய அமெரிக்காவில் நடந்த விமான விபத்தில் பிரபல இசையமைப்பாளர் ஆரேலியோ மார்டினெஸ் (55) உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்து ஹோண்டூராஸில் உள்ள ரோட்டன் தீவில் நிகழ்ந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஆரேலியோ மார்டினெஸ் கரிஃபுனா (Garifuna) இசைக் குழுவில் இணைந்து சர்வதேச அங்கீகாரம் பெற்றவர். கரிஃபுனா மக்கள் கலாச்சாரம் மற்றும் இசையை உலகளவில் கொண்டு செல்ல அவருக்கு முக்கிய பங்கு இருந்தது. மேலும், அவர் ஹோண்டுராஸின் காங்கிரஸ் கட்சியில் முக்கியமான தலைவராகவும் செயல்பட்டுள்ளார்.

மார்டினெஸ் மறைவிற்கு ஹோண்டுராஸின் ஜனாதிபதி சியோமாரா உட்பட பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். அவரது திடீர் மரணம் அவரது ரசிகர்கள் மற்றும் இசை உலகில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *