பாதுகாப்பு காரணங்களால் கேகேஆர் – லக்னௌ போட்டி குவாஹாட்டிக்கு மாற்றம்

18-வது ஐபிஎல் தொடரின் முதலாவது போட்டி 22 ஆம் தேதி கொல்கத்தாவின் ஈடன் காடன் மைதானத்தில் நடைபெறவிருக்கிறது. இந்த போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் பெங்களூரு ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன. ஆனால், ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெறும் ராம நவமி கொண்டாட்டங்களின் காரணமாக, பாதுகாப்பு பரிசீலனைகளில் ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி குவாஹாட்டி மைதானத்திற்கு மாற்றப்பட்டுள்ளதை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேற்குவங்க பாஜக தலைவர் சுவேந்து அதிகாரி, ராம நவமி தினத்தில் மேற்கு வங்கம் முழுவதும் 20,000-க்கும் மேற்பட்ட ஊர்வலங்கள் நடைபெறவுள்ளதாக அறிவித்திருந்தார். இதனால், அப்பகுதியில் பாதுகாப்பு பிரச்சனைகள் ஏற்படும் எனப் பயந்து, இந்த மாற்றம் செய்யப்பட்டிருக்கும். இது கடந்த ஆண்டு நடைபெறிருந்த கொல்கத்தா – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கிடையிலான போட்டிக்கும் தொடர்புடையது, ஏனெனில் அந்த போட்டியும் பாதுகாப்பு காரணங்களால் மாற்றியமைக்கப்பட்டது.