பள்ளி திறந்த மறுநாள்.. மாணவ, மாணவிகளுக்கு இனிப்பு செய்தி
May 29, 2025

ஜூன் 2-ஆம் தேதி கோடை விடுமுறை முடிவடைந்து பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட உள்ளன. இதைத் தொடர்ந்து, பள்ளி தொடங்கிய மறுநாளே மாணவ, மாணவிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி வெளியானது. பள்ளிகள் திறக்கும் தினமே, மாணவர்களுக்கு புதிய பாடப்புத்தகங்கள் வழங்கப்பட உள்ளன. இதன்மூலம் அவர்கள் புத்தாண்டில் புதிய புத்தகங்களைப் பெறும் சந்தோஷம் உண்டாகும்.
மேலும், ஜூன் 3-ம் தேதி காலை உணவுத் திட்டத்தில் சிறப்பு மாற்றம் செய்யப்படுகிறது. தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சரும், தமிழறிஞருமான திரு. கருணாநிதியின் பிறந்த நாளான அதே நாளில், மாணவர்களுக்கு இனிப்பு வகையான சர்க்கரை பொங்கல் வழங்கப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மாணவர்கள் கூடுதல் மகிழ்ச்சியுடன் பள்ளிக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.