பச்சைக் காய்கறிகளை சாப்பிடுவதால் மூளை பாதிப்பு ஏற்படும் அபாயம் குறித்து மருத்துவர்கள் எச்சரிக்கை
March 13, 2026

ஆரோக்கியத்திற்காக பச்சைக் காய்கறிகளை சாப்பிடும் பழக்கம் அதிகரித்துள்ள நிலையில், கீரை, முட்டைக்கோஸ் மற்றும் கத்தரிக்காய் குறித்து மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். முட்டைக்கோஸில் உள்ள நாடாப்புழுக்கள் மூளையைத் தாக்கி நரம்பு மண்டல பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும், மேலும் கீரையில் உள்ள ஆக்ஸலேட் சிறுநீரகக் கற்களுக்கு வழிவகுக்கும்.
கத்தரிக்காயில் உள்ள சோலனைன் என்ற நச்சுத்தன்மை வயிற்று உபாதைகளை உண்டாக்குகிறது, இது சமைக்கும்போது மட்டுமே அழியும். எனவே, தொற்று பாதிப்புகளைத் தவிர்க்க இந்த காய்கறிகளை உப்பு நீரில் கழுவி, நன்றாக வேகவைத்து உண்பதே பாதுகாப்பானது என்று நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.