நாடாளுமன்றத்தில் மோடி அரசு வெற்றி: எதிர்ப்புகளை மீறி நிறைவேறியது 2025 அமைதி அணுசக்தி மசோதா!
December 20, 2025

எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கு மத்தியில் ‘அமைதி மசோதா-2025’ மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. இது 1962 மற்றும் 2010 ஆம் ஆண்டின் பழைய அணுசக்தி சட்டங்களுக்கு மாற்றாக அமையும். 2047-க்குள் 100 ஜிகாவாட் அணுசக்தி உற்பத்தியை எட்டும் நோக்கில், தனியார் மற்றும் வெளிநாட்டு நிறுவனங்கள் இத்துறையில் முதலீடு செய்ய இந்த சட்டம் வழிவகை செய்கிறது.
புதிய சட்டத்தின்படி, விபத்து காலங்களில் நிறுவனங்களின் பொறுப்புணர்வு ஒப்பந்த அடிப்படையில் வரையறுக்கப்படும். இது வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்க உதவும் என்றாலும், புகுஷிமா போன்ற பேரிடர்களை கருத்தில் கொண்டு பாதுகாப்பு மற்றும் இழப்பீட்டு விதிகளில் சமரசம் செய்யக்கூடாது என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். தனியார் பங்களிப்புடன் அணுசக்தி துறையில் இனி பெரும் மாற்றம் ஏற்படும்.