தொடங்குமா இன்று ஐபிஎல்? ரசிகர்கள் கவலை
March 22, 2025

நாடே எதிர்பார்த்து காத்திருக்கும் 2025 ஐபிஎல் சீசன் இன்று தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற உள்ளது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (RCB) மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) அணிகள் மோதவுள்ளன. இந்த ஆட்டம் இரவு 7.30 மணிக்கு ஆரம்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தாலும், கொல்கத்தாவில் கடும் மழை பெய்து வருவதால் போட்டி நடைபெறுமா என்பது சந்தேகமாகியுள்ளது.
மேலும், வானிலை மையம் கொல்கத்தாவில் மிக கனமழைக்கான அலர்ட் விடுத்துள்ளது. இதனால் ரசிகர்கள் பெரும் அதிருப்தியில் உள்ளனர். முதல் போட்டியே பாதிக்கப்படலாம் என உள்ள அச்சத்தால், சமூக வலைதளங்களில் #IPL2025 மற்றும் #RainTrouble போன்ற ஹேஷ்டேக்குகள் வைரலாகி வருகின்றன. போட்டி குறித்த இறுதி தகவலை மழை நிலவரத்தை பொறுத்து மைதான அதிகாரிகள் அறிவிக்கவுள்ளனர்.