திருமணத்திற்கு முன் காதலனுடன் ஓட்டம்! வயலில் மீட்கப்பட்ட மணமகள் உ.பி.யில் பரபரப்பு

திருமணத்திற்கு முன் காதலனுடன் ஓட்டம்! வயலில் மீட்கப்பட்ட மணமகள் உ.பி.யில் பரபரப்பு

உத்தரபிரதேச கிராமம் ஒன்றில், திருமணம் நடைபெறுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பாகவே பரபரப்பான சம்பவம் நடந்துள்ளது. திருமண உடையணிந்த மணமகள் தன் காதலனுடன் வீட்டை விட்டு ஓடிவிட்டார், இதனால் அவரது குடும்பத்தினர் தர்மசங்கடத்திற்கு ஆளாகினர். மணமகள் மாயமானதைக் கேள்விப்பட்டு மாப்பிள்ளை வீட்டாரும் காத்திருக்க, அங்கு பெரும் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.

மணமகளின் குடும்பத்தினரின் உதவியுடன், போலீசார் அப்பெண்ணையும் அவரது காதலனையும் கிராமத்தில் உள்ள ஒரு வயலில் இருந்து மீட்டனர். மணமகளின் சகோதரர் அளித்த புகாரின் பேரில், பர்கேடா காவல் நிலையத்தில் குற்றம் சாட்டப்பட்ட இளைஞன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. திருமணத்திற்கு சற்று முன் நடந்த இந்தச் சம்பவம் கிராமத்தில் பரபரப்பான பேசுபொருளாக மாறியுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *