தமிழகத் தேர்தல் தேதியில் தேர்தல் ஆணையம் வைத்த அதிரடி திருப்பம்

தமிழகத்தில் வழக்கமாக முதற்கட்டத்திலேயே தேர்தல் முடிந்துவிடும் நிலையில், 2026 சட்டமன்றத் தேர்தலில் தேர்தல் ஆணையம் ஒரு பெரிய மாற்றத்தைச் செய்துள்ளது. மார்ச் 15-ல் அறிவிப்பு வெளியாகி, ஏப்ரல் 23-ம் தேதி தான் வாக்குப்பதிவு என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த 39 நாட்கள் இடைவெளி மற்றும் கத்திரி வெயில் காலத்தில் தேர்தல் நடப்பது அரசியல் கட்சிகளுக்கும் வாக்காளர்களுக்கும் பெரும் சவாலாக அமைந்துள்ளது.
மேற்கு வங்கத்தில் தேர்தல் கட்டங்கள் குறைக்கப்பட்ட நிலையில், தமிழகத்திற்கு மட்டும் ஏன் இந்தத் தாமதம் என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏப்ரல் 29-ம் தேதி இறுதிக்கட்ட வாக்குப்பதிவு முடிந்து, மே 4-ம் தேதி தான் வாக்கு எண்ணிக்கை நடைபெறும். இந்த நான்கு நாள் இடைவெளி வாக்குப்பதிவு இயந்திரங்களின் பாதுகாப்பு குறித்த விவாதங்களையும் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.