தமிழகத்தில் தேர்தல் அதிரடி சோதனையில் சிக்கிய ரூ.189 கோடி மதிப்பிலான பொருட்கள்
March 27, 2026

தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிகள் தீவிரமாக அமல்படுத்தப்பட்டு வருகின்றன. உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.189 கோடி மதிப்பிலான ரொக்கம் மற்றும் பொருட்களைப் பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளதாகத் தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார். விதிமீறல்கள் தொடர்பாக ‘சி-விஜில்’ செயலி மூலம் வரப்பெற்ற புகார்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
வரும் 30-ம் தேதி வேட்புமனுத் தாக்கல் தொடங்கவுள்ள நிலையில், பதற்றமான வாக்குச்சாவடிகள் கண்டறியப்பட்டு அங்கு கூடுதல் கண்காணிப்பு மற்றும் நேரலை ஒளிபரப்பு செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதற்காக 2,106 பறக்கும் படைகள் மற்றும் கண்காணிப்புக் குழுக்கள் மாநிலம் முழுவதும் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளன.