டெல்லியில் மதுபானம் வாங்கும் வயது 21 ஆக குறைப்பு? பாஜக அரசின் முடிவால் சர்ச்சை

புதுடெல்லி: டெல்லியில் மதுபானம் வாங்குவதற்கும் அருந்துவதற்கும் குறைந்தபட்ச வயதை 25-லிருந்து 21 ஆக குறைக்கும் பாஜக அரசின் முன்மொழிவு புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் ஆட்சிக்கு வந்த முதல்வர் ரேகா குப்தா அரசு இந்த புதிய கொள்கையை பரிசீலித்து வருகிறது. இந்த நடவடிக்கை மதுபான கள்ளச்சந்தையை கட்டுப்படுத்தி, அரசுக்கு வருவாயை அதிகரிக்கும் என்று அரசு தரப்பு கூறுகிறது. இதன் மூலம் 21 வயதினர் அரசு மதுக்கடைகளில் மதுபானம் வாங்க முடியும்.
அரசின் இந்த முன்மொழிவுக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. குஜராத் மற்றும் பீகார் போன்ற பாஜக ஆளும் மாநிலங்களில் மதுபானம் தடை செய்யப்பட்டுள்ள நிலையில், டெல்லியில் ஏன் இந்த விதி தளர்த்தப்படுகிறது என்று ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் சவுரப் பரத்வாஜ் கேள்வி எழுப்பியுள்ளார். அரவிந்த் கெஜ்ரிவால் ஆட்சிக்காலத்திலும் இதேபோன்ற சர்ச்சை எழுந்தபோது, பாஜக அதை கடுமையாக எதிர்த்தது. இந்த புதிய முடிவு மீண்டும் அரசியல் வட்டாரத்தில் சூடான விவாதத்தை கிளப்பியுள்ளது.